25 677b910e69c41
உலகம்செய்திகள்

தென் கொரியாவில் பலியான 179 உயிர்கள்: இலங்கை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள்

Share

தென் கொரியாவில் பலியான 179 உயிர்கள்: இலங்கை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள்

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் சில நிலையான நிர்மாணங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும் வகையில் நிர்மாணங்களை அகற்றுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 179 உயிர்கள் பலியாகியமையை கருத்தில் கொண்டு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விமான நிலையத்தின் நிலையான நிர்மாணத்துடன் தொடர்புடைய இடர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தையும் சிவில் விமான சேவை அதிகார சபையையும் வலியுறுத்தி இலங்கை விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் முன்னதாக எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

அதன்போது, சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் காலி வீதியின் எல்லையில் உள்ள 9 கன அடி சுவர் தொடர்பில் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கட்டமைப்பினால் முவான் விமான நிலைய அனர்த்தம் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ள சங்கம், சுவரை அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...