tamilni 243 scaled
உலகம்செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியருக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் தென்கொரிய நிறுவனம்

Share

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியருக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் தென்கொரிய நிறுவனம்

தென்கொரியாவில் மிகப்பாரிய நிறுவனம் ஒன்று, குழந்தையை பெற்றெடுக்கும் தங்கள் ஊழியர்களுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வழங்குகிறது.

தங்கள் நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தென் கொரியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான Booyoung Group, தனது ஊழியர்களுக்கு மிகப்பாரிய சலுகையை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் குழந்தைகள் பிறக்கும் போது 100 million Korean Won (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 2.35 கோடி) கொடுப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த மூன்று ஆண்டுகளாக, அதாவது 2021 முதல் 70 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஊழியர்களுக்கு மொத்தம் 7 பில்லியன் கொரியன் வோன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.165 கோடி) ரொக்கப் பணம் வழங்குவதாகவும் நிறுவனம் அறிவித்தது. அதாவது, ஓவ்வொரு குழந்தைக்கும் ரூ.2.35 கோடி (LKR) வழங்க திட்டமிட்டுள்ளது.

மூன்று குழந்தைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு ரூ.7.07 கோடி (LKR) ரொக்கம் அல்லது வாடகை வீட்டு வசதி வழங்கப்படும்.

இந்த சலுகைகள் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பொருந்தும்.

தென் கொரியா 2022-இல் உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் (0.78) கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...