12 2
இந்தியாஉலகம்செய்திகள்

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

Share

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

குளிர்பானம் விஷம் என்றால் அதன் தயாரிப்பை தடை செய்யுங்கள் என்று நடிகர் ஷாருக்கான் பேசிய கருத்து பகிரப்பட்டு வருகிறது.

குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதனை குடிப்பதை யாரும் நிறுத்துவதில்லை.

அதே நேரம் குளிர்பான விளம்பரத்தில் நடிகர்கள் நடித்தால் அதற்கு விமர்சனங்கள் ஏற்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கரண் தாப்பர் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருடன் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், “குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு மோசமானது என்று நீங்கள் நினைத்தால், அதை தடை செய்யுங்கள். நம் நாட்டில் விற்க வேண்டாம். புகைபிடித்தல் மோசமானது என்றால் சிகரெட் உற்பத்தியை தொடர விடாதீர்கள்.

குளிர் பானங்கள் மோசமானவை என்று நீங்கள் நினைத்தால், அவற்றை அனுமதிக்காதீர்கள். இது நம் மக்களுக்கு விஷம் என்றால், அதை இந்தியாவில் தயாரிக்க விடாதீர்கள்.

உங்களுக்கு வருமானத்தை அளிக்கிறது என்ற காரணத்தால் அதனை நிறுத்தமாட்டீர்கள். சில தயாரிப்புகள் தீங்கு விளைவிப்பதாக நீங்கள் நினைத்தால் ஏன் நிறுத்தவில்லை, ஏனென்றால், அவை அரசாங்கத்திற்கு வருவாய்.

ஆனால், என் வருவாயை நிறுத்தாதீர்கள். நான் ஒரு நடிகர். நான் ஒரு வேலையைச் செய்து அதன் மூலம் வருமானம் பெற வேண்டும். ஏதாவது தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை நிறுத்துங்கள். எந்த பிரச்சனையும் இல்லை.

புகைப்பிடிப்பதால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மக்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்குத் தெரியும்.

படங்களில் புகைபிடிப்பதை விட மிகப்பெரிதாக இருக்கும் சுகாதாரப்பிரச்னையை கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...