12 2
இந்தியாஉலகம்செய்திகள்

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

Share

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

குளிர்பானம் விஷம் என்றால் அதன் தயாரிப்பை தடை செய்யுங்கள் என்று நடிகர் ஷாருக்கான் பேசிய கருத்து பகிரப்பட்டு வருகிறது.

குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதனை குடிப்பதை யாரும் நிறுத்துவதில்லை.

அதே நேரம் குளிர்பான விளம்பரத்தில் நடிகர்கள் நடித்தால் அதற்கு விமர்சனங்கள் ஏற்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கரண் தாப்பர் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருடன் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், “குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு மோசமானது என்று நீங்கள் நினைத்தால், அதை தடை செய்யுங்கள். நம் நாட்டில் விற்க வேண்டாம். புகைபிடித்தல் மோசமானது என்றால் சிகரெட் உற்பத்தியை தொடர விடாதீர்கள்.

குளிர் பானங்கள் மோசமானவை என்று நீங்கள் நினைத்தால், அவற்றை அனுமதிக்காதீர்கள். இது நம் மக்களுக்கு விஷம் என்றால், அதை இந்தியாவில் தயாரிக்க விடாதீர்கள்.

உங்களுக்கு வருமானத்தை அளிக்கிறது என்ற காரணத்தால் அதனை நிறுத்தமாட்டீர்கள். சில தயாரிப்புகள் தீங்கு விளைவிப்பதாக நீங்கள் நினைத்தால் ஏன் நிறுத்தவில்லை, ஏனென்றால், அவை அரசாங்கத்திற்கு வருவாய்.

ஆனால், என் வருவாயை நிறுத்தாதீர்கள். நான் ஒரு நடிகர். நான் ஒரு வேலையைச் செய்து அதன் மூலம் வருமானம் பெற வேண்டும். ஏதாவது தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை நிறுத்துங்கள். எந்த பிரச்சனையும் இல்லை.

புகைப்பிடிப்பதால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மக்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்குத் தெரியும்.

படங்களில் புகைபிடிப்பதை விட மிகப்பெரிதாக இருக்கும் சுகாதாரப்பிரச்னையை கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...