12 2
இந்தியாஉலகம்செய்திகள்

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

Share

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

குளிர்பானம் விஷம் என்றால் அதன் தயாரிப்பை தடை செய்யுங்கள் என்று நடிகர் ஷாருக்கான் பேசிய கருத்து பகிரப்பட்டு வருகிறது.

குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதனை குடிப்பதை யாரும் நிறுத்துவதில்லை.

அதே நேரம் குளிர்பான விளம்பரத்தில் நடிகர்கள் நடித்தால் அதற்கு விமர்சனங்கள் ஏற்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கரண் தாப்பர் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருடன் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், “குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு மோசமானது என்று நீங்கள் நினைத்தால், அதை தடை செய்யுங்கள். நம் நாட்டில் விற்க வேண்டாம். புகைபிடித்தல் மோசமானது என்றால் சிகரெட் உற்பத்தியை தொடர விடாதீர்கள்.

குளிர் பானங்கள் மோசமானவை என்று நீங்கள் நினைத்தால், அவற்றை அனுமதிக்காதீர்கள். இது நம் மக்களுக்கு விஷம் என்றால், அதை இந்தியாவில் தயாரிக்க விடாதீர்கள்.

உங்களுக்கு வருமானத்தை அளிக்கிறது என்ற காரணத்தால் அதனை நிறுத்தமாட்டீர்கள். சில தயாரிப்புகள் தீங்கு விளைவிப்பதாக நீங்கள் நினைத்தால் ஏன் நிறுத்தவில்லை, ஏனென்றால், அவை அரசாங்கத்திற்கு வருவாய்.

ஆனால், என் வருவாயை நிறுத்தாதீர்கள். நான் ஒரு நடிகர். நான் ஒரு வேலையைச் செய்து அதன் மூலம் வருமானம் பெற வேண்டும். ஏதாவது தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை நிறுத்துங்கள். எந்த பிரச்சனையும் இல்லை.

புகைப்பிடிப்பதால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மக்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்குத் தெரியும்.

படங்களில் புகைபிடிப்பதை விட மிகப்பெரிதாக இருக்கும் சுகாதாரப்பிரச்னையை கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...