articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

Share

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, 2026 ஜனவரி மாத இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணைக்குழு (ICA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை விமான நிறுவனங்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். ICA அதனை ஆய்வு செய்த பிறகு, தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள். உரிய ஆவணங்கள் இல்லாத பயணிகளை அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உரிய விசா அல்லது ஆறு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது. சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ICA தளத்தின் (ICA Feedback Channel) வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ICA நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தைத் திட்டமிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ICA எச்சரித்துள்ளது. விதிகளின்படி நடக்காத விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...