1 3 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் ஒரே நேரத்தில் புலம்பெயர்தலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பும் ஆதரவும்

Share

ஜேர்மனியில் ஒரே நேரத்தில் புலம்பெயர்தலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பும் ஆதரவும்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த மாகாண தேர்தல்களின் முடிவுகள், ஆளும் கூட்டணிக்கு எதிராகவும், வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன.

ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதே நேரத்தில், புலம்பெயர்தலுக்கு எதிரான வலதுசாரிக்கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துவருகிறது.

ஆக, ஒரே நேரத்தில் ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அதிகரிக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது எனலாம்.

வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தில், புகலிடம் மற்றும் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களைத்தான் முன்வைத்தது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டும் ஜேர்மனியிலேயே தங்கியிருப்பவர்களை நாடுகடத்தவேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழும் அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் வேண்டுமென்றே அச்சத்தை உருவாக்கி வந்துள்ளது அக்கட்சி. ஜேர்மனியில், பல துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்த அக்கட்சி விரும்புகிறது.

அப்படியிருந்தும் அக்கட்சி, சமீபத்திய தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, மக்களில் ஒரு தரப்பினர் அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்றுதானே பொருள்?

ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல, புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையில் மட்டுமே 250,000 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட அதிகம்.

ஆக, ஆளும் கூட்டணிக் கட்சிகள் புலம்பெயர்தலை ஆதரிக்கின்றன. மக்களோ, புலம்பெயர்தலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவை அதிகரித்து வருகிறார்கள். மொத்தத்தில், இப்போதைக்கு ஜேர்மனியில் புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு குழப்பமான சூழலே காணப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...