1 3 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் ஒரே நேரத்தில் புலம்பெயர்தலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பும் ஆதரவும்

Share

ஜேர்மனியில் ஒரே நேரத்தில் புலம்பெயர்தலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பும் ஆதரவும்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த மாகாண தேர்தல்களின் முடிவுகள், ஆளும் கூட்டணிக்கு எதிராகவும், வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன.

ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதே நேரத்தில், புலம்பெயர்தலுக்கு எதிரான வலதுசாரிக்கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துவருகிறது.

ஆக, ஒரே நேரத்தில் ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அதிகரிக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது எனலாம்.

வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தில், புகலிடம் மற்றும் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களைத்தான் முன்வைத்தது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டும் ஜேர்மனியிலேயே தங்கியிருப்பவர்களை நாடுகடத்தவேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழும் அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் வேண்டுமென்றே அச்சத்தை உருவாக்கி வந்துள்ளது அக்கட்சி. ஜேர்மனியில், பல துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்த அக்கட்சி விரும்புகிறது.

அப்படியிருந்தும் அக்கட்சி, சமீபத்திய தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, மக்களில் ஒரு தரப்பினர் அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்றுதானே பொருள்?

ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல, புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையில் மட்டுமே 250,000 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட அதிகம்.

ஆக, ஆளும் கூட்டணிக் கட்சிகள் புலம்பெயர்தலை ஆதரிக்கின்றன. மக்களோ, புலம்பெயர்தலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவை அதிகரித்து வருகிறார்கள். மொத்தத்தில், இப்போதைக்கு ஜேர்மனியில் புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு குழப்பமான சூழலே காணப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...