tamilnif 7 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய பிரதமருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Share

பிரித்தானியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 1997 தேர்தல் போன்று மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டு ஆட்சியை இழக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மத்தியில் பிரித்தானியாவில் தேர்தலை முன்னெடுக்கும் திட்டத்துடன் பிரதமர் ரிஷி சுனக் செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், மொத்தமுள்ள 650 ஆசனங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 169 எண்ணிக்கை மட்டுமே கைப்பற்றும் என்றும், தொழில் கட்சி 385 ஆசனங்களை வென்று ஆட்சியை கைப்பறும் என்றும் முக்கியமான கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

1997ல் கன்சர்வேடிவ் கட்சி இழந்த ஆசனங்களை விடவும் 2024 தேர்தலில் அதிக எண்ணிக்கையில் இழப்பை எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.

மேலும், 1906க்கு பின்னர் ஆளும் கட்சி ஒன்று மிக மோசமாக மக்கள் ஆதரவை இழப்பதும் இந்த முறை தான் என்றும் கூறப்படுகிறது.

மொத்தம் 14,000 பிரித்தானிய மக்கள் YouGov முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டுள்ளனர். நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 19 சதவிகித புள்ளிகள் பின்தங்கியுள்ளதாகவே தெரியவந்தது.

ஆனால், முந்தைய தேர்தலின் போதும் நூற்றுக்கணக்கான கருத்துக்கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டும், அவை அனைத்தும் பொய்யானதாக பிரதமர் ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...