12 19
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

பிரித்தானியாவின் புதிய பிரதமர் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பிரித்தானிய பிரதமரின் செல்வாக்கு குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் பிரதமராக தொழில் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்றார்.

அவர் பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத போதும், அதற்குள் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுமக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இந்த மாதம், மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஆய்வமைப்பான Ipsos மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துணைப்பிரதமரான ஏஞ்சலா ரேய்னர் மற்றும் சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரின் செல்வாக்கு மக்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆய்வில் பங்கேற்ற பிரித்தானியர்களில் 52 சதவிகிதம் பேர் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும், 22 சதவிகிதத்தினர் மட்டுமே பிரித்தானியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். 19 சதவிகிதத்தினர் நடுநிலையாக பதிலளித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...