3 7 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் அதிகரித்துள்ள கடனாளிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

Share

கனடாவில் அதிகரித்துள்ள கடனாளிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

கனேடியர்கள்(Canada) அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கனடாவில் வங்கி வட்டி வீதம் சிறிது அளவு குறைக்கப்பட்டு இருந்தாலும் இது கடன் பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் உலகில் அதிகளவு கடன் பெறுவோரை கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகித்ததாக கூறப்படுகிறது.

வட்டி வீத அதிகரிப்பு காரணமாக கனேடியர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செலவுகள் அதிகரிப்பும் கடன் பிரச்சினைக்கான பிரதான எழுத்துக்களில் ஒன்று எனவும் செலவு அதிகரிப்பு மற்றும் வட்டி வீத உயர்வு போன்ற ஏதுக்களினால் கனேடியர்களினால் சேமிப்பு செய்வதில் சிக்கல்கள் எதிர் நோக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் வட்டி வீதம் மேலும் குறைக்கப்படும் என பல நிதி நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...