image
செய்திகள்உலகம்

புராதன இடத்தில் பதிவான பாலியல் குறும்படம்!!

Share

பண்டைய கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்சில் உள்ள தொல்பொருள் தளமான அக்ரோபொலிசில் பாலியல் குறும்படம் காட்சியாக்கப்பட்ட விடயம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அக்ரோபோலிசில் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்வது போன்ற காட்சிகள் குறித்த டிபார்த்தினான் என்ற படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் இருந்து கண்டனங்கள் வலுத்தததையடுத்து கலாச்சார அமைச்சு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.

இது தொடர்பில் கலாச்சார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் , அக்ரோபோலிசில் படப்பிடிப்பு நடத்த அனுமதி எதுவித அனுமதியும் குறித்த படக்குழுவிற்கு அளிக்கப்படவில்லை.

அக்ரோபோலிசின் தொல்பொருள் தளமானது, சமூக செயல்பாடு மற்றும் நினைவுச்சின்னத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் எந்தவித செயல்பாடுகளுக்கும் ஏற்ற இடம் அல்ல. என்றுள்ளது.

இது தொடர்பில் படத்தின் தயாரிப்பாளர் கருத்து வெளியிடுகையில்,இது ஒரு கலைப்படைப்பு என்றும், எமக்கெதிரான அரசியல் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலிஸ், உலகின் மிகவும் பிரபலமான பண்டைய தொல்பொருள் தளங்களில் ஒன்று. உயர் பாறை அடுக்கின் மேல் உள்ள இந்த பண்டைய அரண்ஆகும்.

வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பெரும் கட்டிடக்கலையின் பண்டையக் கிரேக்கக் கட்டிடக்கலை எச்சங்களையும், குறிப்பாக பிரபலமான பார்த்தினன் கட்டிடத்தையும் கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...