25 67b33b6d0a29a
உலகம்செய்திகள்

கனடாவில் கடுமையான பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு

Share

கனடாவில் கடுமையான பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு

கனடாவில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஒன்டாரியாவின் டொரன்ரோவில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை நாளை வரை நீடிக்கும் எனவும், தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பான முறையில் வீடுகளில் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெருமளவு பயணிகள் விமான நிலையத்தில் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே காலநிலை தொடர்பான அறிவுறுத்தல்கள் அறிந்து செயற்படும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...