உலகம்செய்திகள்

கனடாவில் கடுமையான பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு

Share
25 67b33b6d0a29a
Share

கனடாவில் கடுமையான பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு

கனடாவில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஒன்டாரியாவின் டொரன்ரோவில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை நாளை வரை நீடிக்கும் எனவும், தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பான முறையில் வீடுகளில் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெருமளவு பயணிகள் விமான நிலையத்தில் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே காலநிலை தொடர்பான அறிவுறுத்தல்கள் அறிந்து செயற்படும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...