25 684a2fdb31138
உலகம்செய்திகள்

தென்னாபிரிக்காவில் கடும் வெள்ளம்: மாணவர்கள் உட்பட பலர் பலி

Share

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வெள்ளத்தினால், பாடசாலை பேருந்து ஒன்று இழுத்து செல்லப்பட்டதில் உயிரிழந்த மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருவதால் மழை மற்றும் பனி காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு கேப்பில் பகுதியில் இருந்து வெள்ளத்தினால், பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் மாகாண அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று டெகோலிக்னி என்ற கிராமத்தில் பாடசாலை செல்லும் வழியில் ஒரு பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பேருந்தில், மாணவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் உட்பட 13 பேர் சம்பவ நேரம் பயணித்ததாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துரதிஸ்டவசமாக அந்த மாணவர்களில் நான்கு பேரும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நான்கு பேரை காணவில்லை, மீட்புக் குழுக்கள் இன்னும் உடல்களைத் தேடி வருகிறது.

முன்னதாக 2022ஆம் ஆண்டில், தென்னாபிரிக்காவின் டேர்பன் மற்றும் குவாசுலு – நடால் மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...