25 684a2fdb31138
உலகம்செய்திகள்

தென்னாபிரிக்காவில் கடும் வெள்ளம்: மாணவர்கள் உட்பட பலர் பலி

Share

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வெள்ளத்தினால், பாடசாலை பேருந்து ஒன்று இழுத்து செல்லப்பட்டதில் உயிரிழந்த மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருவதால் மழை மற்றும் பனி காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு கேப்பில் பகுதியில் இருந்து வெள்ளத்தினால், பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் மாகாண அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று டெகோலிக்னி என்ற கிராமத்தில் பாடசாலை செல்லும் வழியில் ஒரு பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பேருந்தில், மாணவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் உட்பட 13 பேர் சம்பவ நேரம் பயணித்ததாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துரதிஸ்டவசமாக அந்த மாணவர்களில் நான்கு பேரும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நான்கு பேரை காணவில்லை, மீட்புக் குழுக்கள் இன்னும் உடல்களைத் தேடி வருகிறது.

முன்னதாக 2022ஆம் ஆண்டில், தென்னாபிரிக்காவின் டேர்பன் மற்றும் குவாசுலு – நடால் மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 1 8
செய்திகள்இலங்கை

வவுனியாவில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்: வட்டி, போதைப்பொருள் விற்பனை மூலம் அபகரித்த சொத்துக்கள் இலக்கு!

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்த நபர்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள்...

image 37812857b2
இலங்கைசெய்திகள்

வாகன விலைகள் ராக்கெட் வேகத்தில் உயரும்: 15% வரி தள்ளுபடி நீக்கப்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதி விலைகள் வரம்புகளைத் தாண்டி அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்...

images 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நவம்பர் 17 அன்று அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று (ஒக்டோபர் 27)...

19sex 17509
செய்திகள்இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: 9 மாதங்களில் 7,677 முறைப்பாடுகள் – பாலியல் அத்துமீறல்கள் 414 ஆக பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக 414...