9 3 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

ஆதார் கார்டை தூக்கி எறிந்த சீமான்.., இது தான் எனது அடையாளமா என்று ஆவேசம்

Share

ஆதார் கார்டை தூக்கி எறிந்த சீமான்.., இது தான் எனது அடையாளமா என்று ஆவேசம்

தமிழ் மொழி அல்லாத அடையாள அட்டை என் அடையாளமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 28 -ம் திகதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தை வாக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டம் 7 நாட்களை கடந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், “தமிழன் தான் எனது அடையாளம். எனது முகம் சிதைந்து இருந்தால் என் முகத்தை அடையாளம் காண முடியாது. அது போல, என் மொழி சிதைந்து அழிந்தால் என் இனத்தை அடையாளம் காண முடியாது.

1800 ஆண்டுக்கு முன்பு ஏது கன்னட மொழி, 1600க்கு முன்புக்கு ஏது தெலுங்கு மொழி, 15ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மலையாள மொழி இல்லை. ஆனால், இன்று மூத்த மொழியான தமிழ் மொழியை தொலைக்க பார்க்கிறார்கள்” என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவரின் ஆதார் அட்டை நகலை வாங்கிய சீமான், “இந்தியா நமக்கு கொடுக்கும் அடையாளத்தை பாருங்கள். இதில் எனது பெயர் முதலில் ஹிந்தியில் உள்ளது, அடுத்து ஆங்கிலத்தில் உள்ளது.

என் தாய்மொழி இதில் இல்லை. இது தான் என் அடையாளமா?” என்று கேள்வி கேட்டு ஆதார் அட்டை நகலை தூக்கி எறிந்தார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...