1 4
உலகம்செய்திகள்

இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்பை நேரடியாக சந்திக்கவுள்ள நெதன்யாகு

Share

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், ஹமாஸுடனான இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் குறித்து விவதிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது “ஹமாஸுக்கு எதிரான வெற்றி”, ஈரானை எதிர்கொள்வது மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது குறித்து விவாதிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், காசா போர் நிறுத்தம் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஹமாஸின் இரண்டு முக்கிய அதிகாரிகள், வன்முறையை நிரந்தரமாக நிறுத்த உதவும் இரண்டாம் கட்ட விவரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தமது குழு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இது “இஸ்ரேல் – அமெரிக்க கூட்டணியின் வலிமையைக்” காட்டுகிறது என்று நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக பங்கேற்று ஒரு வெளிநாட்டுத் தலைவருடனான ட்ரம்பின் முதல் வெள்ளை மாளிகை சந்திப்பு இதுவாகும்.

எனினும், காசா மற்றும் லெபனான் ஆகிய இரு பிராந்தியங்களிலும் பலவீனமான போர்நிறுத்தங்கள் நடைபெற்று வருவதாக பாலஸ்தீனிய ஆதரவு தரப்புக்கள் கருத்து கூறி வருகின்றன.

அங்கு இஸ்ரேலிய ஆதிக்கமானது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவை பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீது கவனம் செலுத்தியுள்ளது.

இஸ்ரேலின் போர்க்கால முடிவுகள் மத்திய கிழக்கை மறுவடிவமைத்துள்ளன என்றும் ட்ரம்பின் ஆதரவுடன், இது இன்னும் அதிகமாக செல்லக்கூடும் என்றும் நெதன்யாகு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...