உலகம்செய்திகள்

30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை: 11 வயது பிரித்தானிய சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல்

Share

30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை-ஐ உரிமையாளரிடம் சிறுமி ஒருவர் சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், சாவி, மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை பார்த்துள்ளார்.

மேலும் அந்த கைப்பையில் 1993ம் வருடம் குறிப்பிடப்பட்ட சில கிரெடிட் கார்டுகளும் இருந்துள்ளது.

இதையடுத்து பையின் மேலே உள்ள அடையாளங்கள் மற்றும் அதில் இருந்த சில பொருட்களை வைத்து சமூக ஊடகங்களில் கைப்பையின் உரிமையாளரை தேடும் பணியில் 11 வயது மெய்சி கூட்ஸ் இறங்கியுள்ளார்.

11 வயது சிறுமி தனது நீண்ட தேடலுக்கு பிறகு, ஒருவழியாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி-யிடம் கைப்பையை சிறுமி ஒப்படைத்தார்.

இது தொடர்பாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி பேசிய போது, நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை, இத்தனை வருடங்களுக்கு பிறகும் பை அப்படியே உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தின் தாக்கம் நம்ப முடியாத அளவு இருப்பதாக சிறுமியின் தாயார் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு தற்போது 81 வயதுடைய ஆட்ரி ஹே என்பவரின் கைப்பை திருடப்பட்டுள்ளது.

அப்போது அந்த கைப்பையில் 200 பவுண்ட் பணம் இருந்துள்ளது, அதனை எடுத்துவிட்டு திருடன் கைப்பையை டான் நதியில் வீசி விட்டு சென்றுள்ளார்.

அப்போது இது தொடர்பாக பொலிஸில் புகார் அளித்தும், காவல்துறையினரால் அப்போது அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...