உலகம்செய்திகள்

30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை: 11 வயது பிரித்தானிய சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல்

Share

30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை-ஐ உரிமையாளரிடம் சிறுமி ஒருவர் சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், சாவி, மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை பார்த்துள்ளார்.

மேலும் அந்த கைப்பையில் 1993ம் வருடம் குறிப்பிடப்பட்ட சில கிரெடிட் கார்டுகளும் இருந்துள்ளது.

இதையடுத்து பையின் மேலே உள்ள அடையாளங்கள் மற்றும் அதில் இருந்த சில பொருட்களை வைத்து சமூக ஊடகங்களில் கைப்பையின் உரிமையாளரை தேடும் பணியில் 11 வயது மெய்சி கூட்ஸ் இறங்கியுள்ளார்.

11 வயது சிறுமி தனது நீண்ட தேடலுக்கு பிறகு, ஒருவழியாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி-யிடம் கைப்பையை சிறுமி ஒப்படைத்தார்.

இது தொடர்பாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி பேசிய போது, நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை, இத்தனை வருடங்களுக்கு பிறகும் பை அப்படியே உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தின் தாக்கம் நம்ப முடியாத அளவு இருப்பதாக சிறுமியின் தாயார் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு தற்போது 81 வயதுடைய ஆட்ரி ஹே என்பவரின் கைப்பை திருடப்பட்டுள்ளது.

அப்போது அந்த கைப்பையில் 200 பவுண்ட் பணம் இருந்துள்ளது, அதனை எடுத்துவிட்டு திருடன் கைப்பையை டான் நதியில் வீசி விட்டு சென்றுள்ளார்.

அப்போது இது தொடர்பாக பொலிஸில் புகார் அளித்தும், காவல்துறையினரால் அப்போது அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...