download 22 1 1
உலகம்செய்திகள்

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!

Share

செர்பியாவின் தலைநகர் Belgrade-இல் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Belgrade-இல் உள்ள  Vladislav Ribnikar எனும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவர் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

செர்பியாவில் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட பின்னர், குறித்த மாணவர் தாமாகவே பொலிஸாருக்கு அழைப்பு மேற்கொண்டு, தகவல் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் ஒரு மாதத்திற்கு முன்பே தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் இலக்கு வைக்கும் சிறுவர்களின் “பட்டியலை” எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2009 இல் பிறந்தவர்கள் – அதாவது சம்பவத்தின் போது அவர்களுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், செர்பியாவில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...