15 5
உலகம்செய்திகள்

365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பள்ளி.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Share

365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பள்ளி.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

ஆண்டுக்கு 365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் உள்ள பழங்குடியின கிராமம் ஒன்றில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பள்ளி இயங்கி வருகிறது. இதனை, மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் டாடா பூஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

திரிம்பகேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹிவாலி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி உள்ளது. இந்த பள்ளியானது 365 நாட்களும், ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் இயங்குகிறது.

இங்கு படிக்கும் மாணவர்கள் வகுப்பறை பாடங்களை மட்டுமல்லாமல் வெல்டிங், மின்சார வேலை மற்றும் இயற்கை விவசாயம் போன்றவற்றை பயின்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இங்கு சேரும் மாணவர்கள் படிக்காத மற்றும் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தாலும் அசாதாரண திறமையுடன் வெளிவருகின்றனர். பள்ளியின் பாடத்திட்டத்தில் பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

பள்ளியின் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்தாலும் இங்குள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காலையில் பிரார்த்தனையில் இருந்து தொடங்கி, சில சமூகப் பணிகள், உடற்பயிற்சி, எழுதுதல், கடைசியாக பள்ளியில் இரண்டு முறை உணவு இடைவேளையுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், எழுத்துப் பயிற்சி வழங்குதல், வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்தல் என இங்குள்ள மாணவர்கள் தினமும் தங்களது கற்றல் திறனை மேம்படுத்துகின்றனர்.

பள்ளிகளின் சுவர்களில் அழகான வார்லி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனை படிப்பு நேரம் முடிந்து வரைந்தோம். கிராமத்தில் உள்ள சில வீடுகளும் வர்ணம் பூசப்பட்டுள்ளன என்று மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த மாணவர், “நாங்கள் ஆண்டு முழுவதும் பள்ளிக்குச் செல்கிறோம். அங்கு, இரண்டு வேளை உணவு வழங்கப்படுகிறது. எனது நண்பர்கள் அனைவரும் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் உள்ளனர்.

சில நேரங்களில் பள்ளியில் உள்ள மூத்த மாணவர்கள் இளையவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். ஒன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கான YouTube அணுகலையும் நாங்கள் பெற்றுள்ளோம்” என்றார்.

ஜில்லா பரிஷத் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றும் கேசவ் கவித் என்பவர் கூறுகையில், “கற்றல் மீதான இந்த அர்ப்பணிப்பு குழந்தைகளிடையே படிப்பின் மீது ஆழமான அன்பை வளர்ப்பது மட்டுமல்லாமல் கல்வித் திறன்களையும் வளர்த்துள்ளது” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...