7 3
உலகம்செய்திகள்

டசின் கணக்கானோர்… பாடசாலை கட்டிட விபத்தில் உறுதி செய்த அதிகாரிகள்

Share

இடிந்து விழுந்த இந்தோனேசிய பள்ளியின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள இரண்டு மாடி உண்டு உறைவிடப் பள்ளி இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள், அவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

அந்த விபத்தில் குறைந்தது ஐந்து மாணவர்கள் இறந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கியதிலிருந்து 13 மாணவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர், இருப்பினும் இருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தற்போது, வியாழக்கிழமை, பேரிடர் தணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்ப ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ள மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளில் இருந்து உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக எவரும் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்ததன் பின்னர், கனரக கருவிகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்னும் அழுகை மற்றும் அலறல் சத்தம் கேட்கிறது என்று அதிகாரிகள் புதன்கிழமை கூறியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பாடசாலை வளாகத்தில் காத்திருக்கின்றனர், அவர்களில் பலர் தங்கள் அன்புக்குரியவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...