23 64fccfcc1859e
உலகம்செய்திகள்

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

Share

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

ஆண்டு பிறந்து இந்த 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தனடனையை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான வழக்குகளில் சமூக ஊடக பதிவுகள் அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மக்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், அதிகாரிகளின் கொலைப்பசியால் தற்போது சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் மரண பயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான முகமது பின் நாசர் என்பவருக்கு, சமூக ஊடக செயல்பாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது தன் மதத்தை காட்டிக்கொடுத்தது, சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டில் தமக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை ஒழிக்க முயற்சித்து வருவதையே அதிகரிக்கும் மரண தண்டனை எண்ணிக்கை காட்டுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

2015ல் இருந்தே சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மானின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் உலகளவில் தனது நாட்டின் மதிப்பை உயர்த்தவும், தன்னை ஒரு நவீனத்துவவாதியாக சித்தரிக்கவும் அவர் முயன்று வருகிறார்.

வன்முறையை தூண்டாத குற்றங்களுக்கு மரண தண்டனையை குறைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார், ஆனால் அவரது ஆட்சியின் கீழ் வருடாந்தர மரணதண்டனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2015ல் இருந்து சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு சராசரியாக 129 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 2022ல் மட்டும் 196 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவென கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...