உலகம்செய்திகள்

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

23 64fccfcc1859e
Share

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

ஆண்டு பிறந்து இந்த 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தனடனையை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான வழக்குகளில் சமூக ஊடக பதிவுகள் அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மக்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், அதிகாரிகளின் கொலைப்பசியால் தற்போது சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் மரண பயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான முகமது பின் நாசர் என்பவருக்கு, சமூக ஊடக செயல்பாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது தன் மதத்தை காட்டிக்கொடுத்தது, சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டில் தமக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை ஒழிக்க முயற்சித்து வருவதையே அதிகரிக்கும் மரண தண்டனை எண்ணிக்கை காட்டுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

2015ல் இருந்தே சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மானின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் உலகளவில் தனது நாட்டின் மதிப்பை உயர்த்தவும், தன்னை ஒரு நவீனத்துவவாதியாக சித்தரிக்கவும் அவர் முயன்று வருகிறார்.

வன்முறையை தூண்டாத குற்றங்களுக்கு மரண தண்டனையை குறைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார், ஆனால் அவரது ஆட்சியின் கீழ் வருடாந்தர மரணதண்டனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2015ல் இருந்து சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு சராசரியாக 129 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 2022ல் மட்டும் 196 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவென கூறப்படுகிறது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...