24 667f7cfe0ff26 28
உலகம்செய்திகள்

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

Share

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு கோடை காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

குறைந்தபட்ச மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து பொருளியல் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சஸ்கட்ச்வான் மாகாணத்தில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 2 டொலர்களினால் அதிகரிக்கப்பட உள்ளது. கனடாவில் மிகவும் சம்பளம் குறைவான மாகாணமாக சஸ்கட்ச்வான் கருதப்படுகின்றது.

எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைக்கு மத்தியில் இந்த சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை, மளிகைப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

குறைந்தபட்ச மணித்தியால சம்பள அதிகரிப்பு வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும் அதிகரிப்பு தொகை போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவின் நுனாவட் பிராந்தியத்தில் அதிகூடிய மணித்தியால சம்பளமாக 19 டொலர் காணப்படுகின்றது.

ஒன்றாரியோ, மானிடோபா, பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகள் மற்றும் சஸ்கட்ச்வான் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...