உலகம்செய்திகள்

கனடாவிலுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

7 30
Share

கனடாவிலுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada) பணியாற்றி வரும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், கனடிய மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிக கூடிய சம்பள திட்டத்தின் கீழ் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுபுறத்தில் இவ்வாறு சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதனால் தொழில் தருணர்கள் அதிக அளவு உள்நாட்டு கனேடியர்களை பணியில் அமர்த்த கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாணத்தின் அடிப்படை மணித்தியால சம்பளத்தை விடவும் 20% சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் எட்டாம் திகதி முதல் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் வெளிநாட்டு பணியாளர்களை விடவும் உள்நாட்டு கனடியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் இவ்வாறு சம்பளத்தை அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...