volcanoafps1763296482 0 436x333 17633737102041559789513 3 0 231 436 crop 17633737757491145053552
உலகம்செய்திகள்

ஜப்பானில் சகுராஜிமா எரிமலை வெடிப்பு: 13 மாதங்களுக்குப் பிறகு நெருப்பு உமிழ்வு – விமான சேவைகள் இரத்து!

Share

எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில், கடந்த 13 மாதங்களாக அமைதியாக இருந்த புகழ்பெற்ற சகுராஜிமா (Sakurajima) எரிமலை தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சகுராஜிமா எரிமலை: ககோஷிமா (Kagoshima) நகரத்தின் அருகில் அமைந்துள்ள இந்த எரிமலை, தற்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது.

அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால், வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோ மீட்டர் தூரம் உயரத்திற்குக் கரும்புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்தது.

இந்த எரிமலை 2019ஆம் ஆண்டு நெருப்புப் பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கி.மீ. தூரம் புகை மண்டலமாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

எரிமலை வெடிப்பின் காரணமாக வான்வழிப் பாதையில் புகை மற்றும் சாம்பல்கள் நிரம்பிக் காணப்படுவதால், அந்நாட்டின் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ககோஷிமா விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளும் தாமதமாகி இருக்கின்றன.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...