volcanoafps1763296482 0 436x333 17633737102041559789513 3 0 231 436 crop 17633737757491145053552
உலகம்செய்திகள்

ஜப்பானில் சகுராஜிமா எரிமலை வெடிப்பு: 13 மாதங்களுக்குப் பிறகு நெருப்பு உமிழ்வு – விமான சேவைகள் இரத்து!

Share

எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில், கடந்த 13 மாதங்களாக அமைதியாக இருந்த புகழ்பெற்ற சகுராஜிமா (Sakurajima) எரிமலை தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சகுராஜிமா எரிமலை: ககோஷிமா (Kagoshima) நகரத்தின் அருகில் அமைந்துள்ள இந்த எரிமலை, தற்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது.

அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால், வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோ மீட்டர் தூரம் உயரத்திற்குக் கரும்புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்தது.

இந்த எரிமலை 2019ஆம் ஆண்டு நெருப்புப் பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கி.மீ. தூரம் புகை மண்டலமாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

எரிமலை வெடிப்பின் காரணமாக வான்வழிப் பாதையில் புகை மற்றும் சாம்பல்கள் நிரம்பிக் காணப்படுவதால், அந்நாட்டின் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ககோஷிமா விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளும் தாமதமாகி இருக்கின்றன.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...