tamilni 405 scaled
உலகம்செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம்: 65 பிணைக் கைதிகளுடன் பறந்ததா?

Share

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம்: 65 பிணைக் கைதிகளுடன் பறந்ததா?

ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று பெல்கோரோட் பகுதியில் உக்ரைனிய படையால் வீழ்த்தப்பட்டு இருப்பது உக்ரைன்-ரஷ்யா இடையிலான ராணுவ நடவடிக்கையில் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் நாட்டின் தெற்கில் உள்ள பெல்கோரோட் (Belgorod) பகுதியின் யப்லோனோவோ(Yablonovo) நகரில் ரஷ்ய ராணுவத்தின் போக்குவரத்து விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இலியுஷின்-76(Ilyushin-76) விமானத்தில் சென்றவர்கள் அல்லது கொண்டு செல்லப்பட்டவை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.

ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தகவலின், Ilyushin-76 விமானத்தில் 65 பிணைக்கைதிகள் மற்றும் 9 மற்ற உறுப்பினர்கள் விமானத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

கீவ் போஸ்ட் தகவலின்படி, உக்ரைனிய ஜெனரல் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் வீழ்த்தப்பட்ட விமானத்தில் வான் பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்த ஏவுகணைகளை ரஷ்யா கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானமான Ilyushin-76ஐ உக்ரைன் தான் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா நேரடியாக டெலிகிராமில் குற்றம்சாட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...