உலகம்செய்திகள்

காதலியை சீரழித்து 111 முறை கத்தியால் குத்திய ரஷ்யருக்கு மன்னிப்பளித்த ஜனாதிபதி புடின்

Share

காதலியை சீரழித்து 111 முறை கத்தியால் குத்திய ரஷ்யருக்கு மன்னிப்பளித்த ஜனாதிபதி புடின்

உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, கொடூர குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

மூன்றரை மணி நேரம் சித்திரவதை
தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றதற்காக விதிக்கப்பட்ட 17 வருட சிறைத்தண்டனையை விளாடிஸ்லாவ் கன்யூஸ் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அனுபவித்துள்ளார்.

காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் கன்யூஸ் தனது முன்னாள் காதலியை சீரழித்து, 111 முறை கத்தியால் குத்தி மூன்றரை மணி நேரம் சித்திரவதை செய்துள்ளார். பின்னர் அவர் ஒரு கேபிள் இரும்பினால் குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து, இறுதியில் அவளைக் கொன்றுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 7 முறை பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பொலிஸ் தரப்பில் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஆணை மூலம் நீக்கப்பட்டது
கன்யூஸ் ரஷ்ய ராணுவ வீரர் என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது கன்யூஸ் விடுவிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து, கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார்

இதனிடையே, உக்ரைன் எல்லைக்கு கன்யூஸ் மாற்றப்படும் தகவலை சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கன்யூஸ் மன்னிக்கப்பட்டார் எனவும், அவரது தண்டனை ஏப்ரல் 27 அன்று ஜனாதிபதி ஆணை மூலம் நீக்கப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....