tamilnih 8 scaled
உலகம்செய்திகள்

ஒரே நாளில் உக்ரைன் 234 வீரர்கள் சண்டையில் மரணம்!

Share

ஒரே நாளில் உக்ரைன் 234 வீரர்கள் சண்டையில் மரணம்!

உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில், அந்நாட்டின் 234 வீரர்களை கொன்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன.

செவ்வாயன்று நடந்த சண்டையில், உக்ரைன் வீரர்கள் 234 பேர் தங்கள் படைகளால் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஷ்யா ராணுவம் மற்றும் எல்லைப் படைகள் தாக்குபவர்களை நிறுத்தவும், எல்லை தாண்டிய தாக்குதலைத் தவிர்க்கவும் முடிந்தது என கூறப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் 7 டாங்கிகள் மற்றும் 5 கவச வாகனங்களை இழந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களில் என்ன நடக்கிறது என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அப்பகுதிகளில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் போர் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...