ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம்
உலகம்செய்திகள்

ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம்

Share

ரஷ்ய தளபதிக்கு 5,900 அடி தொலைவில் இருந்து சீறி வந்த மரணம்

ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளது, போரில் முதல் முறை என கூறப்படுகிறது.

முற்றுகையிடப்பட்ட பக்மூத் நகரத்தில் வைத்தே அந்த ரஷ்ய தளபதி கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பேய் படை என அறியப்படும் 12 தொலைதூர துப்பாக்கி சுடும் வீரர்களில் இந்த ஆல்பாவும் ஒருவர்.

பக்மூத் நகரம் ரஷ்யர்களால் முற்றுகையிடப்பட்டதன் பின்னர், அந்த வீரர்களை இலக்கு வைத்து தாக்கி வந்துள்ளது பேய் படை. ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்தியத்தில் அந்த படைகளின் துணைத் தளபதி என உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.

அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், ட்ரோன் விமானங்களால் அந்த தளபதி அடையாளம் காணப்பட்டார் எனவும், அவர் தற்போது இந்த உலகில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் கடினமான முயற்சி இதுவென குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி, உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பின்னர் இதுவே அதிக தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படும் முதல் சம்பவம் என்றார்.

மரணம் எங்கிருந்து வேண்டுமானாலும் சீறி வரலாம் என இனி எதிரிகள் திணறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை அளிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்ச்சைக்குரிய இந்த கொத்து குண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...