tamilni 218 scaled
உலகம்செய்திகள்

நள்ளிரவில் 40 ஏவுகணை வீசிய ரஷ்யா: வெற்றிகரமாக தாக்குதலை முறியடித்த உக்ரைன்

Share

நேற்றிரவு உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ராக்கெட் தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கையானது இன்னும் சில தினங்களில் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

இதுவரை நடந்த போர் தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

இருப்பினும் உக்ரைன் வான் பாதுகாப்பு பகுதியை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு உக்ரைனிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா 40 ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 8 ஏவுகணைகளை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனின் மின்னணு வான் தடுப்பு சாதனங்கள் மூலம் ரஷ்யாவால் ஏவப்பட்ட மேலும் 20 ஏவுகணைகள் இலக்கை அடையாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...