7 26
உலகம்செய்திகள்

அடுத்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள்: கனடா முடிவு

Share

அடுத்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள்: கனடா முடிவு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக, கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

2023ஆம் ஆண்டு, 5,00,000க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கியது. 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு 4,85,000 சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த ஆண்டில், அதாவது, 2025ஆம் ஆண்டில், 4,37,000 பேருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் இறுதிவாக்கிலிருந்து, முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில், குறைந்தபட்சம் 16 மாதங்களாவது படிக்கும் வகையிலான கல்வித்திட்டங்களில் சேருவோரின் துணைவர்களுக்கு மட்டுமே கனடாவில் பணி அனுமதி வழங்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....