உலகம்செய்திகள்

புலம்பெயர் மக்களின் மரணம்… ஐரோப்பிய நாடொன்றிற்கு எதிராக ஐ.நாவிடம் அகதி ஒருவர் புகார்

Share

புலம்பெயர் மக்களின் மரணம்… ஐரோப்பிய நாடொன்றிற்கு எதிராக ஐ.நாவிடம் அகதி ஒருவர் புகார்

புலம்பெயர் மக்கள் விவகாரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் அனைத்து விதிகளையும் மீறியுள்ளதாக கூறி 25 வயதேயான அகதி ஒருவர் ஐ.நாவிடம் புகார் அளித்துள்ளார்.

2014ல் மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்றபோது குறைந்தது 15 பேர் இறந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மொராக்கோ நாட்டவரான அந்த 25 வயது நபர் தெரிவிக்கையில், ஒரு தசாப்தம் கடந்துவிட்டது, இன்னும் பலரின் இறப்பு மற்றும் காயங்களுக்கு ஒரு நபர் கூட பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மூன்று நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் அல்லது உயிர் தப்பியவர்கள் என எவரிடமும் தங்கள் கருத்தினை விசாரணை அதிகாரிகள் பெறவில்லை என்றே அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அன்று எல்லையில் நடந்த வன்முறை நீதிமன்றத்தில் தொடர்ந்தது, அங்கும் எங்களை மனிதர்களாக நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொராக்கோவில் இருந்து ஸ்பானியப் பகுதியான சியூட்டாவுக்குச் செல்ல முயன்ற சுமார் 200 பேருடன் அவர் இணைந்தபோது அவருக்கு 15 வயது.

சுமார் 18 மாதங்கள் உதவ எவருமின்றி, எந்த ஆவணங்களும் இன்றி மிகக் கடுமையான வாழ்க்கையை அந்த ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்ததாகவும், அதன் பின்னரே ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சம்பவத்தன்று ஸ்பெயின் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பேர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயங்களுடன் தப்பினர். 2019ல் ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு பின்னர், 16 பொலிசார் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.

இதனிடையே, அந்த மொராக்கோ இளைஞர் ஜேர்மனியில் குடியேறியதுடன், அங்குள்ள அரசாங்கம் அடைக்கலம் அளிக்கவும் உறுதி அளித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ECCHR ஆதரவுடன் ஐ.நாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...