w720 p16x9 2022 01 25T203739Z 982850873 RC2K6S9UCWTU RTRMADP 3 USA IMMIGRATION FLORIDA
உலகம்செய்திகள்

அகதிகளை ஏற்றிய படகு விபத்து!!- 38 பேரை காணவில்லை!!

Share

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி கடல் பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்றையதினம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல்படையினர் குறித்த பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து கிடைப்பதனை கண்டுள்ளனர்.

உடனடியாக படகின் அருகில் சென்று பார்த்தபோது படகின் மேல் பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்குப் போராடுவதைப் பார்த்து கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் சனிக்கிழமை இரவு சுமார் 40 பேருடன் அகதிகளை ஏற்றி வந்த படகு மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் படகு கவிழ்ந்த பகுதியில் ஒருவரின் சடலத்தை மீட்டு இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

காணாமல் போன 38 தேடி வருவதாகவும் படகிலிருந்து விழுந்தவர்கள் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்தியபடி உயிர் பிழைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லை எனவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#World



Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...