w720 p16x9 2022 01 25T203739Z 982850873 RC2K6S9UCWTU RTRMADP 3 USA IMMIGRATION FLORIDA
உலகம்செய்திகள்

அகதிகளை ஏற்றிய படகு விபத்து!!- 38 பேரை காணவில்லை!!

Share

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி கடல் பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்றையதினம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல்படையினர் குறித்த பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து கிடைப்பதனை கண்டுள்ளனர்.

உடனடியாக படகின் அருகில் சென்று பார்த்தபோது படகின் மேல் பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்குப் போராடுவதைப் பார்த்து கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் சனிக்கிழமை இரவு சுமார் 40 பேருடன் அகதிகளை ஏற்றி வந்த படகு மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் படகு கவிழ்ந்த பகுதியில் ஒருவரின் சடலத்தை மீட்டு இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

காணாமல் போன 38 தேடி வருவதாகவும் படகிலிருந்து விழுந்தவர்கள் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்தியபடி உயிர் பிழைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லை எனவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#World



Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...