tamilni Recovered 7 scaled
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி

Share

ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி

ஜெர்மனியில் (Germany) உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைத்து புறாக்களையும் கொல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நகரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி நகரவாசிகளின் ஒப்புதலை பெற்ற பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

‘லிம்பர்க் ‘ (Limburg)என்று அழைக்கப்படும் இந்த சிறிய நகரத்தில் பல்லாயிரக்கணக்கான புறாக்கள் வாழ்கின்றன, அவை நகரவாசிகளுக்கு தலைவலியாக மாறியுள்ளன.

அத்துடன், புறாக்களால் பல ஆண்டுகளாக மாசுபட்டுள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களை சுத்தம் செய்வது நகராட்சி அதிகாரிகளுக்கே தலைவலியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி | Referendum In Germany To Kill Pigeons

இந்த நிலையில், புறாக்களை கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளிடம், நகர மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 20ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புறாக்களை கொல்வதற்கு நகரவாசிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி புறாக்களை கொல்ல நகர அதிகாரிகள் தயாராகி வரும் நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும், கருத்துக் கணிப்புகளின்படி, இந்த நடவடிக்கை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...

25 6909692213679
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: ஐஸ் போதைப்பொருள் மற்றும் வழிப்பறி கொள்ளை – தேடப்பட்டவர் உட்பட 6 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உட்பட மொத்தமாக ஆறு...

images
செய்திகள்இலங்கை

எம்.பி. செல்வம் அடைக்கலநாதனுக்கு உயிர் அச்சுறுத்தல்: கனடா நபர் மீது புகார் – யூடியூபர் மீதும் மன்னார் நகரபிதா முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு...

court
இலங்கைசெய்திகள்

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில்: குண்டுச் சம்பவங்களுடன் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று...