24 664f89c36f4b2
உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை

Share

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வரும் நிலையில் அந்த 3 நாடுகள் இம்முடிவை அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பையடுத்து, நோர்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு எதிரானதோ அல்லது ஹமாஸுக்கு ஆதரவளிப்பதோ அல்ல என்றும், காசா பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக என்றும் ஸ்பெயின் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தவிர, 140 உறுப்பு நாடுகள் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக இதுவரை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...