8 2
உலகம்செய்திகள்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

இஸ்ரேலிலிருந்து (Israel) இலங்கை வந்த இலங்கையர்கள் மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்லுவதற்கான தங்களது வீசாவை நீட்டிக்க தேவையான சில முக்கிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் இஸ்ரேல் போரானது ஆரம்பித்த தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு வீசா நீட்டிக்க PIBA நிறுவனத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பிரஜைகள் மட்டுமின்றி பிற நாட்டினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும் எனினும், இந்த செயல்முறை நிறைவேற சில நாட்கள் பிடிக்கலாம்.

மீள் வருகை வீசா காலம் முடிந்திருப்பினும், மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்ல விருப்பமுள்ளவர்கள், எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக வந்து, அங்கிருந்து எலாட் (Eilat) நகரம் வரை தனியார் பேருந்து வசதியுடன் செல்ல முடியும்.

Share
தொடர்புடையது
12 1
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் (USA) கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக...

13 1
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை...

11 1
உலகம்செய்திகள்

பற்றி எரியும் நாடுகள் – இஸ்ரேல் மீது வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் – சூளுரைக்கும் ஈரான்

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நேற்று...

6 5
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

மத்திய தெஹ்ரானில் (Tehran) இலக்கு வைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி மேஜர்...