இஸ்ரேலிலிருந்து (Israel) இலங்கை வந்த இலங்கையர்கள் மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்லுவதற்கான தங்களது வீசாவை நீட்டிக்க தேவையான சில முக்கிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் இஸ்ரேல் போரானது ஆரம்பித்த தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு வீசா நீட்டிக்க PIBA நிறுவனத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இலங்கைப் பிரஜைகள் மட்டுமின்றி பிற நாட்டினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும் எனினும், இந்த செயல்முறை நிறைவேற சில நாட்கள் பிடிக்கலாம்.
மீள் வருகை வீசா காலம் முடிந்திருப்பினும், மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்ல விருப்பமுள்ளவர்கள், எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக வந்து, அங்கிருந்து எலாட் (Eilat) நகரம் வரை தனியார் பேருந்து வசதியுடன் செல்ல முடியும்.