23 2
இலங்கைஉலகம்செய்திகள்

ஷேக் ஹசீனா செய்த பெரும் தவறு : ரணில் சுட்டிக்காட்டு

Share

ஷேக் ஹசீனா செய்த பெரும் தவறு : ரணில் சுட்டிக்காட்டு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina), முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை நீண்ட காலத்திற்கு முன்பே சிறையிலிருந்து விடுவித்திருந்தால், இன்னும் நாட்டின் பிரதமராக இருந்திருப்பார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

எனினும் தற்போது காலிதா ஷியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக ரணில் கூறினார்.

இதற்கிடையில், நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ முன்வந்ததால், தற்போது நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனாவுக்கு ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளை தெரிவித்தார்.

இலங்கைக்கு உண்மையில் பணம் தேவைப்படும்போது அவர் 200 மில்லியன் டொலர்களை வழங்கியதால், அவரை, தாம் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை பங்களாதேஷில் அமைதி நிலவும் என்று நம்புவோம் என்று அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...