rrrr scaled
உலகம்செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை.., எந்தெந்த பகுதியில்?- இந்திய வானிலை மையம் தகவல்

Share

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது..,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரியிலும் பெய்து வருகிறது.

எனவே, இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும், தென்மாவட்டங்களில் மழை நீடிக்கும்.

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுபோன்று, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
11 14
இலங்கைசெய்திகள்

எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்.. சுட்டிக்காட்டும் ஆளும் தரப்பு!

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம்...

10 14
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஏற்பட போகும் ஆபத்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த காலத்தின் மோசமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரம் மீண்டு வந்தாலும், இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும்...

9 13
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் குற்றங்களில் நெருங்கிய தொடர்பில் முக்கிய அதிகாரிகள்: பகிரங்கப்படுத்தும் சரத் பொன்சேகா

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் கொழும்பில் ஊடவியலாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்‌ச மற்றும்...

8 14
இலங்கைசெய்திகள்

அநுர அரசுக்கு எதிராக ரணில் – சஜித்தின் தீர்மானம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக்...