24 66a9c58aa9975
உலகம்

பாரீஸ் நதி நீர் சுத்தம் தொடர்பில் எழுந்த கேள்விகள்: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

Share

பாரீஸ் நதி நீர் சுத்தம் தொடர்பில் எழுந்த கேள்விகள்: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

பாரீஸ் நதி நீர் சுத்தம் தொடர்பில் எழுந்த கேள்விகள் காரணமாக, திட்டமிட்டபடி நீச்சல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஓடும் Seine நதி நீரை கடந்த மாத இறுதியில் ஆய்வகத்தில் பரிசோதித்ததில், மனிதக்கழிவில் காணப்படும் இரண்டுவகை கிருமிகள் நதி நீரில் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.

ஆகவே, அந்த நதி நீரில் நீச்சல் போட்டிகள் நடத்துவது நீச்சல் வீரர் வீராங்கனைகளின் உடல் நலத்தை பாதிக்கலாம் என்ற கருத்து எழுந்தது.

அதைத் தொடர்ந்து, நதி நீர் சுத்தமாகத்தான் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக பாரீஸ் மேயரான Anne Hidalgo Seine நதியில் நீந்தினார்.

ஆனால், நதி நீரின் தரம் தரம் திருப்திகரமாக இல்லாததால், இரண்டு முறை நீச்சல் பயிற்சிகளை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஒத்திவைத்தார்கள். மீண்டும் நதி நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.20 மணிக்கு கிடைத்த பரிசோதனை முடிவுகள், நீரின் தரம் நீச்சல் போட்டிகளை நடத்த தகுதியானதாக உள்ளதாக தெரிவித்துள்ளன.

ஒரு கட்டத்தில், நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் என மூன்று அம்சங்கள் கொண்ட ட்ரையத்லான் போட்டிகளை, நதி நீர் சுத்தம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, நீச்சலை விட்டு விட்டு, சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவை மட்டுமே கொண்ட டூயத்லானாக ஆக்கிவிடலாமா என கூட போட்டி அமைப்பாளர்கள் யோசித்திருந்தார்கள்.

ஆனால், தற்போது நதி நீர் நீச்சல் போட்டிகளை நடத்துவதற்கு தகுதியுடையதாக இருப்பதாக ஆய்வகப் பரிசோதனைகள் தெரிவித்துள்ளதால், ட்ரையத்லான் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

08 17
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி: ஆட்சித் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), தனது தந்தையின் ஆட்சிக்...

07 17
செய்திகள்உலகம்

ஈரான் போர் ஜூன் வரை நீடித்தால் 45 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வர்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தற்போதைய போர்ச்...