அமெரிக்காவில் கத்திக்குத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி
அமெரிக்காவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில், குயின்ஸில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் பலத்த காயமடைந்த மேலும், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
சம்பவத்தில் 11 வயது சிறுமி, 12 வயது சிறுவன், 44 வயதுடைய பெண் மற்றும் 30 வயதுடைய ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.