3 1
உலகம்செய்திகள்

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளாடிமிர் புடின்

Share

பிரதமர் நரேந்திர மோடியுடனான சிறப்பு சந்திப்பிற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதத்தில் இந்தியா பயணப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமாகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை இந்தியா அறிவித்தது தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் புடினின் இந்த சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 மற்றும் 6ம் திகதிகளில் புடின் இந்தியாவில் இருப்பார் என்றே கூறப்படுகிறது. ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரி விதித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், அதன் மீது பொருளாதார அழுத்தத்தை அளிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியே பெருமளவு ஆதாரமாக உள்ளது.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தனது இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயைக் குறைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளன.

ஆனால் ரஷ்யாவால் ஐரோப்பாவிலிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிபொருள் விற்பனையை திருப்பிவிட முடிந்தது, இதனால் பல பில்லியன் டொலர் நிதி திரட்டவும் ரஷ்யாவால் முடிந்தது.

இந்தியாவும் ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை சோவியத் சகாப்தம் முதலே முன்னெடுத்து வருகிறது. மேலும், இந்தியாவின் முன்னணி ஆயுத சப்ளையர்களில் ரஷ்யாவும் ஒன்று.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவின் எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் மாறியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மத்தியில் புடின் தனது வெளிநாட்டு பயணத்தை கணிசமாகக் குறைத்துள்ளார், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைதாணையை புடின் எதிர்கொள்கிறார்.

ஆனால் இந்தியா ICC உறுப்பு நாடு இல்லை என்பதால், புடின் கைது பயம் இல்லாமல் இந்தியா விஜயத்தை மேற்கொள்ளலாம் என்றே கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...