tamilni 450 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் புடின்

Share

பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் புடின்

ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கும் பிரித்தானியர்கள் 12 பேர்களுக்கு விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக அவரது எதிரிகளில் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபரும், சமீபத்தில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் நண்பருமான Bill Browder என்பவரே விளாடிமிர் புடினின் கொலைப் பட்டியல் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறைந்தது 12 பிரித்தானியர்கள் புடினின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் தமது எதிரிகள் அனைவரையும் ஒழித்துக்கட்ட புடின் முடிவு செய்துள்ளார் என்றே Bill Browder குறிப்பிட்டுள்ளார்.

புடினின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ரஷ்யாவில் மலிந்துள்ள ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக போராடும் Bill Browder தற்போது ரஷ்ய ஜனாதிபதிக்கு முதன்மையான எதிரிகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

பிரித்தானியாவில் அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருப்போர் ஆகியோருக்கு புடினால் ஆபத்து வரலாம் என குறிப்பிட்டுள்ள Bill Browder, குறைந்தது ஒரு டசின் பேர்கள் ஆபத்தில் உள்ளனர் என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...