tamilnaadi 118 scaled
உலகம்செய்திகள்

அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களை கைது செய்யும் ரஷ்ய அரசு

Share

அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களை கைது செய்யும் ரஷ்ய அரசு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ரஷ்யாவில் அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதன்படி ரஷ்யாவில் இதுவரை 32 நகரகளில் சுமார் 273 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் திடீர் மரணத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினே காரணமென அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்,

”நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய ஜனாதிபதியின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது.

இதற்கு புடின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.” என்றார்.

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள புடினுக்கு, அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி.

பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...