tamilnaadi 118 scaled
உலகம்செய்திகள்

அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களை கைது செய்யும் ரஷ்ய அரசு

Share

அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களை கைது செய்யும் ரஷ்ய அரசு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ரஷ்யாவில் அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதன்படி ரஷ்யாவில் இதுவரை 32 நகரகளில் சுமார் 273 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் திடீர் மரணத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினே காரணமென அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்,

”நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய ஜனாதிபதியின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது.

இதற்கு புடின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.” என்றார்.

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள புடினுக்கு, அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி.

பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...

125535987 d1afd603 42be 4dc5 92e7 7796b59074e5.jpg
செய்திகள்உலகம்

கட்டாய ராணுவ சேவை அறிமுகம்: அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2.6 லட்சமாக உயர இலக்கு!

நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என ஜெர்மனி ராணுவத் தலைவர்...

MediaFile 12
செய்திகள்இலங்கை

மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – சவப்பெட்டி ஊர்வலம்!

பெருந்தோட்ட மக்களுக்கான ரூ. 200 சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து,...