11 3
உலகம்செய்திகள்

2025ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் ஒரு நல்லது நடக்கும்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் சுவாரஸ்ய தகவல்

Share

2025ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் ஒரு நல்லது நடக்கும்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் சுவாரஸ்ய தகவல்

2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. 2024இல் சந்தித்த எதிர்மறையான விளைவுகளால் வாடியிருக்கும் உலகம், 2025 எப்படி இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பில் உள்ளது.

பல்வேறு ஜோதிடக்கலைஞர்களும் 2025 குறித்த பல விடயங்களை கணித்துக் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில், 2025இல் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து கணித்துள்ளார் ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவர்.

சினெம் சல்மான் (Sinem Salman) என்னும் பெண், தனது கூட்டாளியான போன்ஜுக் (Bonjuk) என்னும் பூனையுடன் இணைந்து எதிர்காலம் குறித்து கணிப்பவர் ஆவார்.

அவ்வகையில், ராஜ குடும்பம் குறித்த ஒரு நல்ல செய்தியைக் கூறியுள்ளார் சல்மான்.

ராஜ குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமுற இருப்பதாக தெரிவிக்கும் சல்மான், அது இளவரசர் ஹரியின் மனைவியான மேகனாக இருக்கலாம் என்கிறார்.

விரைவில் அந்த நல்ல செய்தி வரும் என்று கூறும் மேகன், ஒருவேளை அது கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து, புத்தாண்டில் வெளியாகலாம் என்கிறார்.

அத்துடன், மேகன் கர்ப்பமுற்றதாக வெளியாகும் செய்தியால், ஹரி மேகன் தம்பதியருக்கு ராஜ குடும்பத்துடன் நெருக்கம் ஏற்படும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவிக்கிறார் சல்மான்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...