23 64895d81a9abf
உலகம்செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில் பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள்

Share

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில் பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள நிலையில், பிரான்சில் சில பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பிரான்ஸ் அரசு, புதிய புலம்பெயர்தல் சட்டம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த சட்டம், விரும்பத்தகாதவர்கள் என கருதப்படும் வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதை எளிதாக்குகிறது, வெளிநாட்டவர்கள் அரசு உதவிகளை பெறுவதையும், பிரான்ஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்துவருவதையும் அச்சட்டம் கடினமாக்குகிறது.

இந்நிலையில், அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேற்கு பிரான்சில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். Brittany பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிசார் மீதும் கடைகள் மீதும் கற்களை வீசித் தாக்கியுள்ளார்கள். கண்ணாடிக் கதவு ஜன்னல்கள் உடைந்துள்ளன, குப்பைத்தொட்டிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், அந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில விடயங்களுக்கு நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...