rtjyf 4 scaled
உலகம்செய்திகள்

அயர்லாந்தில் வெடிக்கும் வன்முறை

Share

அயர்லாந்தில் வெடிக்கும் வன்முறை

அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 3 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து நகரம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் பாடசாலை முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் முப்பத்தைந்து வயதுடைய பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வன்முறையின் போது, ஒரு பொலிஸ் அதிகாரியும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தலைநகரில் இடம்பெறும் வன்முறையை கட்டுப்படுத்த அயர்லாந்து பிரதமர், முழு பலத்தையும் பயன்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டப்ளின் நகரில் அமைதியை நிலைநாட்ட 400க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...