24 669a0d459e775
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம்: பிரித்தானியாவின் புதிய பிரதமரின் திட்டம் என்ன?

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம்: பிரித்தானியாவின் புதிய பிரதமரின் திட்டம் என்ன?

ருவாண்டா திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், அத்திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான உள்துறை அலுவலக அலுவலர்களுக்கு, புதிதாக ஒரு பணி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை விரைவாக நாடுகடத்தும் பணிக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

சட்டவிரோத புலம்பெயர்தலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று கூறியுள்ள ஸ்டார்மர், அதற்காக பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு விடயத்தில் ஐரோப்பாவுடனான கூட்டுறவை அதிகரிக்க இருப்பதாகவும், ஆட்கடத்தல் கும்பல்களை பிடிப்பதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதை தடுப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 84 மில்லியன் பவுண்டுகள் செலவிட இருப்பதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதாவது, சிரியா நாட்டு புலம்பெயர்வோர் பிரித்தானியா நோக்கி வருகிறார்கள்.

ஆகவே, ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருக்கும் சிரிய அகதிகளுக்கு கல்வி மற்றும் வேலை கிடைக்கும் வகையில் திட்டங்களுக்காக நிதி உதவி செய்யவும்,

வட மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்வோரை, அவர்கள் நாட்டிலேயே திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படும் இடத்தில் பணியமர்த்தவும், போரால் இடம்பெயர்ந்துள்ள சூடான் நாட்டு மக்களுக்கு மனிதநேய உதவிகள் செய்யவும் திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...