இலங்கைஉலகம்செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்

Share
10 29
Share

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானத்தில், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவை தொடர்ந்தும் அந்த பதவியில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக முன்னதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

 

எவ்வாறாயினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்மட்ட தொழிற்சங்கங்கள், இந்த நியமனத்தை எதிர்த்ததாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் திடீர் திருப்பமாக, முன்னாள் தலைவர் உடனடியாக இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது,

 

இருப்பினும் அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை.

 

இது தொடர்பில், அமைச்சர் விஜித ஹேரத் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

 

இருப்பினும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பதவி விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...