உலகம்செய்திகள்

மன்னர் சார்லசிடம் மன்னிப்புக் கேட்கும் பிரீத்தி பட்டேல்

Share

மன்னர் சார்லசிடம் மன்னிப்புக் கேட்கும் பிரீத்தி பட்டேல்

சர்ச்சைக்குரிய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஆதரவாக மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பிய விடயம் வெளியில் வந்ததற்காக முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏராளம் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்வை சீரழித்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொர்டபிலிருந்த பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத பெண் ஒருவருடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டதற்காக அவரது ராஜ குடும்ப பொறுப்புக்கள் பறிக்கப்பட்டன.

மக்களுடைய வரிப்பணத்திலிருந்து செலவு செய்து, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இளவரசர் ஆண்ட்ரூவுக்கு மீண்டும் பாதுகாப்பை அளிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, அந்த விடயத்தை மீளாய்வு செய்யக்கோரி பரிந்துரை செய்து, மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.

ஆனால், அந்த விடயத்தில் எந்த மாற்றமும் செய்யும் அதிகாரம் மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு கிடையாது.

இதற்கிடையில், இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஆதரவாக மன்னருடைய முதன்மை தனிச்செயலருக்கு பிரீத்தி பட்டேல் மின்னஞ்சல் அனுப்பிய விடயம் வெளியில் லீக்காகிவிட்டது. அந்த விடயம் வெளியில் வந்ததற்காக முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் வெளியில் வந்ததால் மன்னருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காகவும், கஷ்டங்களுக்காகவும் நான் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

இளவரசர் ஆண்ட்ரூவின் பாதுகாப்புக்காக மக்கள் பணத்திலிருந்து கொடுக்கப்பட்ட தொகை, ஆண்டுக்கு 3 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...