9 2 scaled
உலகம்செய்திகள்

இளவரசி கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவது எப்போது? முதன்முறையாக வெளியான அறிவிப்பு

Share

இளவரசி கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவது எப்போது? முதன்முறையாக வெளியான அறிவிப்பு

பிரித்தானிய இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம், பிரித்தானியாவில் அளவுக்கு மீறி கவனம் ஈர்த்துவிட்டது எனலாம்.

ஜனவரி மாதம், இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வுக்காக வீடு திரும்பியதைத் தொடர்ந்து, அவரைக் குறித்து பெரிய அளவில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஆகவே, இளவரசிக்கு என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஆர்வம், வதந்திகள் பரவக் காரணமாக அமைந்துவிட்டது.

இளவரசி கேட் கோமாவில் இருக்கிறார், இளவரசியும் இளவரசர் வில்லியமும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவத் துவங்கின. ஏற்கனவே மன்னர் உடல் நலம் பாதிக்கபட்டதால் அதிக வேலைப்பளுவைச் சுமந்துகொண்டிருக்கும் இளவரசர் வில்லியமுக்கு இந்த செய்திகள் கூடுதல் பாரமாக அமைந்தன.

இந்நிலையில், இளவரசி கேட் பணிக்குத் திரும்புவது குறித்து முதன்முறையாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள Trooping of the Colour என்னும் நிகழ்ச்சிக்காக, குதிரை வீரர்கள் பங்கேற்கும் உடை ஒத்திகை நிகழ்ச்சியை இளவரசி கேட் பார்வையிட உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இளவரசி கேட் நன்றாக இருக்கிறார், அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று மட்டுமே அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்த நிலையில், முதன்முறையாக, இளவரசி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி தொடர்பில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இப்போதும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதேயொழிய, கென்சிங்டன் அரண்மனை வட்டாரம் இதுவரை அந்த செய்தியை உறுதி செய்யவில்லை.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...