24 65fad0f9859d1
உலகம்செய்திகள்

இளவரசர் வில்லியமுக்கு பிரபல ஜோதிடர் எச்சரிக்கை

Share

மன்னர் சார்லசுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என துல்லியமாக கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர், இளவரசர் வில்லியமுடைய நலன் கருதி அவருக்கு நான்கு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé).

சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ். சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கணித்திருந்தார் அவர். அவர் கணித்ததுபோலவே, மன்னர் சார்லஸ், புரோஸ்ட்ரேட் வீக்கத்தாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டார்.

இளவரசர் வில்லியம், அரியணையேறுவதற்கு அவசரப்படக்கூடாது என்று கூறியுள்ள ஏதோஸ், அவர் தன் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படுவதற்காக நான்கு விடயங்களைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் ஏதோஸ்.

1. எதிர்கால மன்னராகும் நிலையை அடைய மன்னர் சார்லசுடைய மற்றும் இளவரசி கேட்டுடைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து இளவரசர் வில்லியம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

2. மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலராக செயலாற்றவேண்டும்.

3. தனது மார்பு மற்றும் நுரையீரல் நலனில் கவனம் செலுத்தவேண்டும்.

4. தந்தையிடமிருந்து ஆட்சியைப் பெறுவதற்கு பொறுமை காக்கவேண்டும்.

மேலும், இளவரசர் வில்லியமுக்கு மாற்றக்காலகட்டம் ஒரு காத்திருக்கிறது என்று கூறியுள்ள ஏதோஸ், தனது வாழ்வில் சந்தித்த அனுபவங்கள் மூலம் அவர் வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகிவருகிறார் என்றும் கூறியுள்ளார்.

என்றாலும், இளவரசர் வில்லியமுக்கும் உடல் நல பாதிப்பு ஒன்று ஏற்படலாம் என ஏதோஸ் எச்சரித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...